யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தர்களுக்கு அபராதம்

காலவதியான பொருட்கள் விற்பனை,  நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்குள்ளான 14 வர்த்தகர்களுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் 60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. யாழ். நகரப் பகுதியில் பாவணையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்பின்...

குருநாகலில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை! நால்வர் கைது

குருநாகல் – வேலன்கொல்லவத்தை பிரதேசத்தில் இயங்கிவந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை உத்தரவொன்றின் பேரில் குருநாகல் வலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில்  5 பேர் பிடிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு பகுதியில் நேற்று வியாழக்கிழமை  மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட...

கனடாவிலிருந்து 70 வயதான இலங்கை தமிழ் பெண் நாடுகடத்தப்பட்டார்

எழுபது வயதான பெண்ணொருவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளார். அனது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லாத நிலையிலும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ் பெண்ணான குணபூசனி கந்தசாமி, நாடுகடத்தப்படும் மற்றொருவருடன் வியாழனன்று இரவு 10 மணிக்கு...

ரயில் மோதி வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

  கரையோர மார்க்கத்தில் கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு இடையில் ரயில் மோதி வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.   பொல்கஹவெலவில் இருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த ரயிலில் இன்று முற்பகல் இந்த வெளிநாட்டுப் பெண் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த...

அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த படகொன்று விபத்து.

  இலங்கையர்கள் உள்ளிட்ட 211 புகழிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த படகொன்று இந்தோனேஷியாவை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.   விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளை...

புலி உருவத்தை பச்சை குத்தியிருந்த இளைஞர் யாழில் கைதாகி விடுதலை

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது. தனது தாயாருடன் ஆலய உற்சத்தில் கலந்துகொண்டிருந்த 27 வயதான மேற்படி இளைஞரின் கையில் புலி உருவம் குத்தப்பட்டிருப்பதை அவதானித்த பொலிஸார் அவ்விளைஞரை கைது...

நியாயமான விலையில் பொருள் விற்பனையில் ஈடுபடாத ப.கூ.முகாமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

உலக உணவுத் திட்டத்தின் கீழ், விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பயனாளிகளுக்கு விற்பனை செய்யத் தவறும் பலநோக்கு கூட்டுறவு முகாமையாளர்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.அருந்தவநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட பலநோக்கு...

மரம் வெட்டி கடத்திய அறுவர் கிளிநொச்சி, முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு பகுதி வனத்தில் அநாவசியமாக மரம் வெட்டிய நான்கு சந்தேகநபர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வெவ்வேறு வர்க்க மரக் கட்டைகள் 16, மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவை...

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகளினால் மக்கள் சிரமம்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயல் திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முரண்பாடுகளினால் பாதீக்கப்பட்ட பிரதேசங்களுக்காண அவசர வேலைத்திட்டத்தின் கீழ் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொங்கீரீட் வீதியினால் மன்னார் மக்கள் எதிர் வரும் காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு...

<< 242 | 243 | 244 | 245 | 246 >>