மரம் வெட்டி கடத்திய அறுவர் கிளிநொச்சி, முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு பகுதி வனத்தில் அநாவசியமாக மரம் வெட்டிய நான்கு சந்தேகநபர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து வெவ்வேறு வர்க்க மரக் கட்டைகள் 16, மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென புதுகுடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி - கன்னகிபுரம் பகுதியில் சட்டவிரோத மரங்களை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மரம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட டிரக் வண்டியும் மீட்கப்பட்டுள்ளது