சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் பிடிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த 5 பேரையும் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.