ரயில் மோதி வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

 

கரையோர மார்க்கத்தில் கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு இடையில் ரயில் மோதி வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

 


பொல்கஹவெலவில் இருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த ரயிலில் இன்று முற்பகல் இந்த வெளிநாட்டுப் பெண் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் 45 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.