அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த படகொன்று விபத்து.

 

இலங்கையர்கள் உள்ளிட்ட 211 புகழிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த படகொன்று இந்தோனேஷியாவை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக படகிற்குள் நீர் நிரம்பியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பொவன் அந்த நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரே படகில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.