குருநாகலில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை! நால்வர் கைது

குருநாகலில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை! நால்வர் கைது

குருநாகல் – வேலன்கொல்லவத்தை பிரதேசத்தில் இயங்கிவந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை உத்தரவொன்றின் பேரில் குருநாகல் வலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வைத்தியராக செயற்பட்ட ஒருவரும் கருக்கலைப்பு செய்ய வந்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று பெண்களும் சட்ட வைத்திய அதிகாரி மூலம் சிகிச்சைகளுக்கென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியராக செயற்பட்ட நபரின் காரை சோதனை செய்தபோது அதிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் குற்றத் தடுப்புப் பிரிவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.