யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பொதுச்சந்தை தொடர்பான கருத்தரங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

வடமாகாண சபையினால் அமைக்கப்பட்டுவரும் கிளிநொச்சி பொதுச்சந்தை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது.   கிளிநொச்சியில் அமைக்கப்படும் பொதுச்சந்தை கட்டிடத் தொகுதியில் இன்றுமாலை (11) இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வடமாகாண பிரதம செயலாளர்...

பஸ்களில் மும்மொழி பொறிக்க வலியுறுத்தல்

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் செல்லுமிடங்கள், திரும்பி வருமிடங்கள் யாவும் மும்மொழிகளிலும் பொறிக்கப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தினை உடன் அமுல்படுத்த வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம இலங்கை மத்திய போக்குவரத்துச் சபைத் தலைவர் சசி வெல்கவுக்கு பணிப்புரை...

வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் அவுஸ்திரேலியா செல்ல முயற்சி

  சட்டவிரோதமாக புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்படுகின்றவர்களில் பெரும்பாலானோர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.   இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட ஆயிரத்துக்கும்...

ஞாயிறு முதல் சுத்திகரிக்கப்பட்ட புதிய எரிபொருள் சந்தைக்கு விநியோகம்

  எதிர்காலத்தில் அவசர விலைமனு கோரல் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பெற்றோலிய தொழிற்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.   வருடாந்தம் நிலவும் தேவையின் அடிப்படையில் திட்டமிட்டு எரிபொருளை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட ஒரு...

திருட முயன்று பொது மக்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட திருடன்: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் நேற்றிரவு வீடென்றில் திருட முற்பட்ட போது திருடன் ஒருவன், பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கிளிநொச்சி உமையாள் புரத்தில் நேற்றிவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்திலிருந்தபோது உள்ளே நுழைத்த திருடர்கள்...

யாழ். நல்லூர் கோயிலில் இரு குழுக்கள் மோதல்: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வெளிவீதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இரு இளைஞர் குழுக்களும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த வேளை, வெற்றுப் போத்தல்களால் தாக்கிக் கொண்டமையாலேயே இளைஞர் இருவர்...

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருக்கார்த்திகை திருவிழா. (படங்கள் இணைப்பு)

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று (10) நடைபெற்றது. மாலை 5 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜை தொடர்ந்து உள் வீதி உலா வந்து, 5.45 மணியளவில் தீபந்தங்கள், கற்பூரச்சட்டிகள் சூழ ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் மத்தியில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் எழுந்தருளி வெளி வீதி...

யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் 12.08.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை ஆகிய...

தரம் குறைந்த டீசல் காரணமாக அம்பியூலன்ஸ்கள் பழுது

கேகாலை வைத்தியசாலைக்குச் சொந்தமான 2 புதிய வாகனங்கள் உட்பட 3 அம்பியூலன்ஸ் வண்டிகள் தரம் குறைந்த டீசலை பயன்படுத்தியன்  காரணமாக பழுதடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை எடுத்துச்சென்றபோது நித்தம்புவ பகுதியில் ஒரு அம்பியூலன்ஸ் வண்டி...

மூளைக் காய்ச்சலில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் மூளை காய்ச்சல் நோயினால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து செல்வராஜா (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். மேற்படி குடும்பஸ்தருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று காலை 11.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

<< 241 | 242 | 243 | 244 | 245 >>