யாழ் செய்திகள்
யாழில் 3 மாதங்களில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் பதிவு – யாழ் பொலிஸ்
யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 500 வாள்வெட்டுச் சம்பங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரெரா தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்! இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்
யாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது
இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.
ஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே...
யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும்
08.09.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை...
லேகியம், மூக்குப்பொடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட மூக்குப்பொடி, மற்றும் லேகியம் விற்பனை செய்த இருவருக்கு 6 ஆறாயிரம் ரூபா அபராதம் விதிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நல்லூர் பகுதியில் இன்று யாழ். மதுவரி நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த பகுதியில் இந்தியாவில்...
யாழிற்கு கிரிக்கெட் வீரர்கள் வருகின்றனர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான மலிங்க, மத்தியூஸ், குலசேகர, சண்டிமல் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு நாளை சனிக்கிழமை வருகை தரவுள்ளதாக யாழ். கிரிக்கெட் மத்திய சங்கம் அறிவித்துள்ளது.
முரளி வெற்றிக்கிண்ண 20 - 20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை முதல் 4 மைதானங்களில் நடைபெறவுள்ளது....
தாதியொருவர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். வைத்திசாலையில் கவனயிர்ப்பு போராட்டம்
யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியில் புகுந்து இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து யாழ் போதானா வைத்திசாலையின் தாதியர்களினால் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்கள்...
கோப்பாய் அரச காணிகளில் வசிக்கும் 286 குடும்பங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை
கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட பகுதிகளில் அரச காணியில் வசித்து வருகின்ற 286 குடும்பங்களுக்கு காணி உரிமப் பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த 286 குடும்பங்களுக்கும் காணி...
முகமாலையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து (Photos)
முகமாலையில் நேற்று மாலை டிப்பர் வாகனஙகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாகத் தெரியவருகின்றது.
டெங்கு நோயால் சிறுவன் உயிரிழப்பு
யாழ். வடமராட்சிப் பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
யாழ். துன்னாலை கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த நாகேந்திரன் தனுசன் (வயது 16) என்ற சிறுவனே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த...
வரமராட்சியில் மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த இளைஞர் குழு: தப்ப விட்ட கோப்பாய் பொலிஸார்
வீதி திருத்த வேலைகளுக்காக வந்தவர் பாடசாலை மாணவியொருவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளைஞர் குழுவினால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்...
இலங்கை செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...
தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...
நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...
தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!
18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி...
பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு
யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
முதலில்...
‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...
மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர்...
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...
புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லையென உறுதியளிக்கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரேமதாஸ சபையில்...