யாழ் செய்திகள்
வெளிச்சவீடு அமைத்துத் தருமாறு யாழ். கடற்தொழிலாளர்கள் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிச்ச வீடுகள் யாவும் யுத்தம் காரணமாக அழிவடைந்துள்ளதால் அதனை புனரமைத்த தருமாறு கட்றதொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை யாழ். பிரதேச செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
யாழ். வைத்தியசாலை தாதியருக்கு வைத்தியசாலைக்குள் விடுதிகள்
யாழ்.போதனா வைத்தியசாலை தாதி ஒருவர் ஆனைப்பந்தி தாதியர் விடுதியில் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தாதியர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா இன்று திங்கள் கிழமை...
வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் ஏழு பேர் கைது
யாழ். திருநெல்வேலி வாள் வெடடுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் 7 பேர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். திருநெல்வேலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் வாள் வெட்டுக்கு இழக்காகி...
திருநெல்வேலிச் சிவன் கோவில் அருகில் ரவுடிகள் அட்டகாசம், ஒருவர் வெட்டிக் கொலை.
இன்று மாலை திருநெல்வேலி சிவன் அம்மன் கோவில் தேர்முட்டிக்கு அருகில் இளைஞன் ஒருவன் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். இன்னும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபா வயது 27 என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிப் படுகொலை...
யாழ்ப்பாணத்தில் 3 பெண்களைத் திருமணம் செய்த கில்லாடி விமான நிலையத்தில் கைது
இரு பெண்களை ஏமாற்றிவிட்டு தாய்லாந்து சென்ற யாழ். வடமராட்சி கிழக்கைச் சோ்ந்த நபர் ஒருவர் அங்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மேற்படி பெண்களை ஏமாற்றிய நபரான பஞ்சாட்சரம் சுதர்சன் மருதங்கேணியை சொந்த இடமாகக்...
நெல்லியடியில் நேற்று இரவு மதுபாணம் அருந்தியபின் தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது
நெல்லியடிப் பகுதியில் உள்ள மதுபாணசாலையில் குடித்துவிட்டு தெருவால் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்திய நான்கு பேரை பொலிசார் நேற்று இரவு கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
இலங்கையின் யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை பிரதேசத்தில் அமைந்துள்ளது சாட்டி சித்தாந்திரை மாதா ஆலயம். அந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா பிரார்த்தனைக்கு பிறகு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து...
கிரிக்கெட் அணி வீரர்கள் யாழில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, ஏஞ்சலோ மத்தியூஸ், நுவன் குலசேகர, தினேஸ் ஷந்திமால் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
வடமாகாணத்தில் நடைபெறுகின்ற முரளி நல்லிணக்க வெற்றிக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...
யாழில் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காக மின்விநியோகம் தடைப்படும்
யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாளை...
தென்னாபிரிக்கா இராஜதந்திரிகள் யாழ்.விஜயம்
தென்னாபிரிக்கா பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இக்குழுவினர் யாழ் ரில்கோ ஹோட்டலில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,...
இலங்கை செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...
தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...
நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...
தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!
18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி...
பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு
யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
முதலில்...
‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...
மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர்...
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...
புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லையென உறுதியளிக்கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரேமதாஸ சபையில்...