டெங்கு நோயால் சிறுவன் உயிரிழப்பு

டெங்கு நோயால் சிறுவன் உயிரிழப்பு

யாழ். வடமராட்சிப் பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

யாழ். துன்னாலை கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த நாகேந்திரன் தனுசன் (வயது 16)  என்ற சிறுவனே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சிறுவன் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.