யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்: சஜித்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியிக் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   தேசிய ரயில்வே சேவைகளின் 19ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே...

கிளிநொச்சியில் சிறுத்தைப்புலி கிணற்றில் இருந்து மீட்பு!

கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்தில் ஆட்களற்ற காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 4 அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.    சிறுத்தை கிணற்றில் வீழ்ந்துகிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.    எனினும் அங்கு ஒருவரே...

தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் அளவளாவிய ஜனாதிபதி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட யோசனையை முன்வைத்தார்.  இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார்.

அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.    2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். அனைத்து அரச ஊழியர்களுக்குமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவிலேயே 2200...

பல்கலைக்கு 100,000 மாணவர்களுக்கு அனுமதி!

2020ஆம் ஆண்டளவில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு  100,000 வரையிலான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.      இன்று 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து மன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பல்கலை மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகள்

பல்கலைக்கழக மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  ஜனாதிபதி   மகிந்த   ராஜபக்ச இன்று தெரிவித்தார்.      இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 2015ம் ஆண்டிற்குரிய வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு...

நாடளாவிய ரீதியில் 100,000 மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஒரு இலட்சம் பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.    மகிந்த ஆட்சிக்கு வந்து தலைமையேற்று 10 ஆவது  வரவு செலவுத்திட்டம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் உரையாற்றும் போதே மகிந்த...

தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்!

தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.  2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் 2015 இல் தபால் சேவையை முழுமையாக நவீனப்படுத்த 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...

வங்காலையில் அதிசயம்! வற்றாமல் பீறிட்டுப் பாயும் நீரூற்று!

மன்னாரில், வங்காலை, இரத்தினபுரி கிராமத்தில், சிறிதாக தோண்டப்பட்ட குழியொன்றில் இருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுக் கிளம்பியுள்ளது.    வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்தே தொடர்ச்சியாக நீர் பாய்ந்து...

புலித்தடை நீக்கம்: எதிர்த்து வெள்ளவத்தையில் கையொப்பம்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் கையொப்பம் பெறும் நடவடிக்கையை தனியார் போக்குவரத்து அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.   எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>