யாழ் செய்திகள்
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...
தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன.
இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...
சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...
மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை
போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...
மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...
அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!
அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...
துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி
இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார்.
மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...
ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...
எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...
இலங்கை செய்திகள்
கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஓருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை(12) கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த சகாப் இமாமூதீன்(வயது...
'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் மீளளிக்கிறார் ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் இன்று ஜனாதிபதி கையளிக்கவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இயங்கி வந்த வங்கியான தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்களால் வைப்பில் இடப்பட்ட நகைகளுக்கான பற்றுச்சீட்டு உள்ள 70 பேருக்கு இன்று...
வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய தேர் தீவைத்து எரிப்பு
வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்...
மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு
நேற்று (11) நள்ளிரவுக்கு அமுலுக்கு வரும் வகையில் மதுபானத்தின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம்...
நானே பொதுவேட்பாளர் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.
பொல்ஹாவெலவில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! பிரசாரத்துக்கு ஐ.தே.க. ஆயத்தம்
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் விடயங்களை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவுடனான சந்திப்பின்போதே இது குறித்து...
108 இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு
இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைவாக 108 இராணுவ வீரர்கள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பதவியுயர்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெள்ளிக்கிழமை(10) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
யுத்த வீரர்கள் எழுவர் உட்பட,...
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி கையளிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும்...
ஐ.தே.க எம்.பி.க்கள் இருவர், ஆளுங்கட்சியில் இணைய முஸ்தீபு
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆளுங்கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இந்த...
ஜன. 9இல் ஜனாதிபதி தேர்தல்?
ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இந்த...