யாழ் செய்திகள்
காணாமல் போனவர் சந்தேகத்தில் கைது
யாழ்ப்பாண பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபரை, வெள்ளிக்கிழமை (21) திருட்டு சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை (22) தெரிவித்தனர்.
குருநகர் 5மாடிக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த அந்தோனி முத்து அன்ரன் ஜெயரோன் (வயது 31) கடந்த 17ஆம் திகதி கடைக்கு...
பொலிஸாருக்கு சாரயம் விற்றவருக்கு தண்டம்
பொலிஸாருக்கு சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான புங்குடுதீவினை சேர்ந்த சந்தேகநபர் ஒருவருக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.
கடந்த வாரம் மேற்படிநபர் அனுமதிபத்திரம் இன்றி சாரயப்போத்தல்களை...
யாழ். மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று(22) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின்...
ஆலயத்துக்குள் திருடமுற்பட்டவருக்கு விளக்கமறியல்
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு ஐயனார் கோயிலுக்குள் நுழைந்து பித்தளை தட்டுக்களை திருடமுற்பட்ட சந்தேகத்தில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் டிசெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன். வெள்ளிக்கிழமை (21)...
நேரம் தவறி மண் ஏற்றிவந்த டிப்பர் சாரதி கைது
வழங்கப்பட்ட நேரம் தவறி மண் அகழ்ந்து வந்த புலோலி தெற்கு பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய, டிப்பர் சாரதியை வெள்ளிக்கிழமை (21) மாலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்.டி.எம்.சிந்தக்க என் பண்டார, சனிக்கிழமை (22) தெரிவித்தார்.
அத்துடன் டிப்பர் வாகனத்தினையும்...
கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்
கசிப்பு உற்பத்தி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான, துன்னாலை கோட்டப்பளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.
கடந்த 15ஆம் திகதி...
பதற்ற சூழலை உருவாக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்
எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம், பொது நூலகத்திற்கு அண்மையாகவுள்ள வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
ஜனாதிபதியுடன் கலந்துரையாடி யாழ். மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றைய...
கஞ்சா கடத்தல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
யாழ். இளவாலை பகுதியில் 81 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, வெள்ளிக்கிழமை (21)...
புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் எங்கே?!
யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ்...
இலங்கை செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...
தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...
நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...
தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!
18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி...
பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு
யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
முதலில்...
‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...
மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர்...
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...
புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லையென உறுதியளிக்கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரேமதாஸ சபையில்...