தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறைவின் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ், சிவில்ப் படைப்பிரிவு ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுகின்றது.
எனவே மீளவும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின அனுட்டானங்களை தடுக்கும் நோக்கில் வடக்கில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.