இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர் என்றும், படகில் சிறுவர்கள் உள்ளிட்ட 37 பேர் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சிலாபம், மாரவில மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இலங்கைக் கடற்படையினரால் அழைத்துவரப்பட்ட இவர்கள், குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.