பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.

முதலில் நாடு, அடுத்து இனம், பின்னர் மதம் என்று கூறியுள்ள அவர், நாட்டை பாதுகாப்பை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக ஞானசார தேரர் கவிதை ஒன்றின் மூலம் நேரடியாக அல்லாமல் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொது எதிரணியில் இருப்பவர்கள் நூல் பாவைகள் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரை திரும்பிப் பார்க்குமாறு கோருவதாகவும் தேரர் கூறினார்.

பொது எதிரணியில் இருப்பவர்கள் குறித்து சாட்சிகள் உள்ளதாகவும் அவற்றை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேற்குலகத்தின் தேவைக்கு ஏற்ப ஆடும் பிரிவினரால் நாட்டுக்கு நன்மை இல்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.