இலங்கை செய்திகள்
கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஓருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை(12) கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த சகாப் இமாமூதீன்(வயது...
'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் மீளளிக்கிறார் ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் இன்று ஜனாதிபதி கையளிக்கவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இயங்கி வந்த வங்கியான தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்களால் வைப்பில் இடப்பட்ட நகைகளுக்கான பற்றுச்சீட்டு உள்ள 70 பேருக்கு இன்று...
வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய தேர் தீவைத்து எரிப்பு
வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்...
மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு
நேற்று (11) நள்ளிரவுக்கு அமுலுக்கு வரும் வகையில் மதுபானத்தின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம்...
நானே பொதுவேட்பாளர் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.
பொல்ஹாவெலவில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! பிரசாரத்துக்கு ஐ.தே.க. ஆயத்தம்
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் விடயங்களை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவுடனான சந்திப்பின்போதே இது குறித்து...
108 இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு
இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைவாக 108 இராணுவ வீரர்கள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பதவியுயர்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெள்ளிக்கிழமை(10) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
யுத்த வீரர்கள் எழுவர் உட்பட,...
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி கையளிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும்...
ஐ.தே.க எம்.பி.க்கள் இருவர், ஆளுங்கட்சியில் இணைய முஸ்தீபு
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆளுங்கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இந்த...
ஜன. 9இல் ஜனாதிபதி தேர்தல்?
ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இந்த...