இந்திய செய்திகள்

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுப்பு! மாணவியை கத்தியால் குத்திய மாணவர்!

காரைக்குடியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்து வருபவர் சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே கல்லூரியில் படித்து வருபவர் ரெனீஸ் (வயது22). இவர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரியில் படித்து...

விடுதலை சிறுத்தைகள் துணை செயலாளர் கொலை

தமழகத்தின், காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் நாராயணன் என்கிற அம்பேத்கார் வளவன் (வயது 42). கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள எல்லப்பா நகரில் வசித்து வருகிறார். காஞ்சீபுரத்தின் மையப்பகுதியான இரட்டை மண்டபம் பகுதியில் இவர் அதிகமாக இருப்பார். அங்குதான் தனது நண்பர்கள்,...

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு சிறை

செங்கல்பட்டை அடுத்த பரனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 10 வயதான, 6-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 7-ந்திகதி பாடசாலையில் மதிய உணவு இடை வேளையின்போது அருகே உள்ள முட்புதரில் சிறுநீர் கழிக்க சென்றாள். அங்கு மறைந்திருந்த மர்ம வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்றார். பின்னர்...

குரானை மனப்பாடம் செய்யாத தன் மகனை அடித்தே கொன்ற தாய்!

பிரிட்டனை சேர்ந்த இந்திய பெண் ஒருவர், குரானை மனப்பாடம் செய்யாத தன் மகனை அடித்தே கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஐதராபாதை சேர்ந்த யூசுப், சாரா ஈஜ் தம்பதியினர் பிரிட்டனில் வசித்து வருகின்றார். இவர்களின் மகன் யாசினை குரான் கற்கச் சொல்லி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர். குரானை...

இலங்கை ஊடாக இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றவர் சிக்கலில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (வயது35). கடந்த செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையில் உள்ள தூதுவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை சி.டி., மற்றும் பென்டிரைவ் மூலம் கடத்த முயன்ற போது கியூ பிரிவு பொலிஸார் தமிம் அன்சாரியை கைது செய்தனர். மேலும் இது...

சிறைகளில் அதிரடி ஆய்வு: வேலூரில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

வேலூர் மத்தியச் சிறையில் சிறைத்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 32 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதவிர, ஐந்து மொபைல் போன்கள், 6 சிம்கார்டுகள் மற்றும் ஏராளமான மெமரி கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறைக்குள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து...

இலங்கை - மதுரைக்கு இடையில் விமான சேவை ஆரம்பம்

மதுரைக்கு நேற்று முதல் சர்வதேச விமான சேவை துவங்கியது. இலங்கை கொழும்புவிலிருந்து நேற்று பகல் 2.15 மணிக்கு ஏர்பஸ் ரக விமானம் மிஹின் லங்கா 120 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் பகல் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடைந்தது. இது மதுரைக்கு வரும் முதல் சர்வதேச விமானம் ஆகும். இதன் மூலம் சர்வதேச...

சேது சமுத்திர திட்ட வழக்கு: பெப்ரவரி 25இல் இறுதி விசாரணை

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்துவது பொருளாதாரரீதியாக சாத்தியம் இல்லை என சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி குழு அளித்த அறிக்கை மீது கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம் வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளித்த உச்ச...

தமிழகத்திற்கு வருமா காவிரி? - இன்று தீர்ப்பு

காவிரி நதிநீரில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் நடப்பாண்டில் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை இடர்பாடு பங்கீட்டு கொள்கையின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிடக் கோரியும் தமிழக அரசு...

திராவகம் வீசி கள்ளக் காதலியைக் கொன்ற நபர் கைது

தமிழகத்தின் கோவை பெரியகடை வீதியைச் சேர்ந்தவர் சந்திரகலா (வயது 35). கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ரவி (35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ரவியின் மனைவிக்கு...

<< 53 | 54 | 55 | 56 | 57 >>