ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் தனது ஏழு வயதுச் சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் தனது மகனின் பள்ளி பையில் துப்பாக்கியை வைத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
பள்ளியில் பிறிதொரு மாணவன் துப்பாக்கியை பார்த்து ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் பின்னதாக குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தமைக்கான காரணத்தை இவர் பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட தாய் நேற்று (18) மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் முன்பள்ளி ஒன்றில் துப்பாக்கி பிரயோகத்தில் 20 சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னர் நியூயோர்க் பள்ளிகளல் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.