“அல்கொய்தாவை ஒழிப்பதே லட்சியம்” ஆப்ரிக்கா நாடுகளில் களமிறங்கும் அமெரிக்கா

 

ஆப்ரிக்க நாடுகளில் அல்கொய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அவர்களை ஒடுக்க அமெரிக்க படைகள் அனுப்பப்பட உள்ளன.

சமீபகாலமாக ஆப்ரிக்க நாடுகளில் அல்கொய்தா இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.

லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன.
கென்யா, உகாண்டா போன்ற நாடுகள், சோமாலியாவை மையமாக வைத்துச் செயல்படும் அல்-சகாப் பயங்கரவாத அமைப்பை எதிர்கொண்டு வருகின்றன.
எனவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

35 நாடுகளுக்கு அமெரிக்கா தனது படைகளை சிறுசிறு குழுவாக அனுப்பி வைக்க உள்ளது. முதலில் நேரடியாக களத்தில் இறங்காமல், அந்நாட்டு படைகளுக்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, அமெரிக்க படைகளை உபயோகிக்கப்படும் என ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க இராணுவ உயரதிகாரி கார்ட்டெர் ஹாம் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகளின் இலக்கை தாக்கி அழிக்க, ஆளில்லா சிறிய விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.