வெளி உலகிற்கு முதல் முறையாக காட்சி தந்த அமேசன் காட்டின் பழங்குடியின மக்கள் !!

வெளி உலகிற்கு முதல் முறையாக காட்சி தந்த அமேசன் காட்டின் பழங்குடியின மக்கள் !!
பிரேசிலின் இதுவரை யாரும் அறிந்திராத பழங்குடி மக்கள் முதல் முறையாக தங்கள் இடத்தை விட்டு வெளிவந்து வெளி உலகிற்கு வந்தனர் . ஆடைகள் அணியாமல் கையில் குச்சியுடன் இருக்கும் இவர்களின் போட்டோக்கள் வெளிவந்துள்ளன . 
 
இவர்கள் பற்றி வேறு எந்த விவரமும் இது வரை தெரியவில்லை . பெரு மற்றும் பிரேசிலின் எல்லையில் உள்ள என்விரா என்னும் நதியின் ஓரத்தில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் மருந்து எடுப்பவர்களால் துரத்தி விட்ட பின்னர் வெளி உலகிற்கு வந்தனர் . 
 
அப்போது இவர்களை பிரேசிலின் FUNAI என்னும் அமைப்பு படம் பிடித்தது இவர்கள் ஏதோ புரியாத மொழியில் கத்திக் கொண்டு இருந்தனர் . அது அவர்களின் தாய்மொழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது .