விஜய்யை ஒன்றும் செய்யாதீங்க.. கெஞ்சிய த்ரிஷா!

விஜய்யை ஒன்றும் செய்யாதீங்க.. கெஞ்சிய த்ரிஷா!
டெல்லி விலங்கியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை கொல்ல வேண்டாம் என்று நடிகை த்ரிஷா ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
டெல்லி விலங்கியல் பூங்காவில் உள்ள விஜய் என்ற வெள்ளை புலி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 20 வயது வாலிபர் ஒருவரை கடித்துக் குதறி கொலை செய்துள்ளது.
 
இந்த சம்பவத்தை அடுத்து அந்த புலியை பார்க்க விலங்கியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையில்,
 
அந்த புலியை கொலை செய்து விடாதீர்கள் என்று பலர் இணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
இந்நிலையில், விலங்கு பிரியரான நடிகை த்ரிஷாவும் அந்த புலியை கொன்றுவிடாதீர்கள் என்று ஜனாதிபதிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.