விஜய்க்காக தவம் கிடக்கும் ஆர்யா: ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்..!

விஜய்க்காக தவம் கிடக்கும் ஆர்யா: ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்..!
விஜய், சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் கத்தி. துப்பாக்கி படத்தையடுத்து விஜய், முருகதாஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
 
அனிருத் இசையத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்யாவும் கலந்து கொண்டார். விழா மேடையில் ஆர்யா பேசியபோது விஜய்யை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
 
மேலும் அவர் பேசியதாவது, நான் பல படங்களில் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டேன், ஆரம்பம் படத்தில் தல அஜீத்துடன் நடித்து விட்டேன். ஆக, அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை தீர்ந்து விட்டது. ஆனால் தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக உள்ளது. ஆனால், அதர்கான சந்தர்ப்பம்தான் இதுவரை அமையவில்லை. அப்படியொரு வாய்ப்புக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
ஆர்யாவின் தவத்தை நிறைவேற்றுவாரா விஜய்..?