வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிடும் நடிகை ஸ்வேதா: சிக்கும் பெரிய தொழில் அதிபர்கள்?

வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிடும் நடிகை ஸ்வேதா: சிக்கும் பெரிய தொழில் அதிபர்கள்?
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தனது வாடிக்கையாளர்களான பெரிய தொழில் அதிபர்களின் பெயர்களை வெளியிடப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின.
 
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்வேதா பாசு ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரிடம் சிக்கினார். 
 
அவருடன் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களும் சிக்கினர். விசாரணையில் தன்னை போன்று பல ஹீரோயின்கள் இந்த தொழிலில் உள்ளதாக தெரிவித்தார்.
 
விசாரணைக்கு பிறகு ஸ்வேதா பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வேதா தனது வாடிக்கையாளர்களான பெரிய நகரங்களை சேர்ந்த பெரிய தொழில் அதிபர்களின் பெயர்களை தெரிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அன்றாட தேவைக்கும், குடும்பத்தாரை காப்பாற்றவும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் தான் விபச்சாரம் செய்ததாக ஸ்வேதா தெரிவித்திருந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கிய ஸ்வேதா விபச்சார வழக்கில் சிக்கியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.