வளரும் கலைஞர்களுக்கு மரியாதை செய்த கமல்

வளரும் கலைஞர்களுக்கு மரியாதை செய்த கமல்
வி.ஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”.
இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் “உலகநாயகன்” கமல்ஹாசன் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார்.
 
இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது.
 
அதனால் உலக நாயகனின் குரல் இதற்கு வலிமை சேர்க்கும் என்று அறிந்த இயக்குனர், தன் கோரிக்கையை அவரிடம் வைக்க, கமலும் மிக அழகாக இப்பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.