லண்டன் புறநகர்ப் பகுதியில் குழுவொன்றினால் தாக்கப்பட்டு தமிழ் இளைஞன் கொலை

பிரித்தானியத் தலைநகர் லண்டன் புறநகர்ப் பகுதியில், வைத்து குழுவொன்றினால் தாக்ககப்பட்ட தமிழ் இளைஞன் சிககிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்தத சனிக்கிழமை லூசியம் பகுதியில் இரவு 9:30 மணியளவில் ஒரு குழுவினர் குறித்த தமிழ் இளைஞனைத் தாக்கியுள்ளனர். அதனை அடுத்து துப்பாக்கிச் சத்தமும் கேட்டதனால் அப்பகுதி மக்கள் காவற்றுறையினனருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் குறிப்பிட்ட தமிழ் இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆயினும் அவர், சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக இலண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர் தமிழன் எனவும், அவர் யார் எனவும் தாம் கண்டுபிடித்து அவரின் உறவினர்களுக்கு தாம் தகவல் வழங்கியதாகத் தெரிவித்துள்ள காவற்றுறையினர், அவரின் பெயர் விபரத்தை வெளியிட மறுத்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறதுஃ