யாழ்ப்பாணத்துக்கு சரத் என்.சில்வா விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு சரத் என்.சில்வா விஜயம்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காங்கேசன்துறை கடற்படை இல்லத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் வியப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த இல்லத்தில் ஜனாதிபதி, விசேட விருந்தினர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரமே திறந்து விடப்படுவது வழக்கம்.
 
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள சரத் என் சில்வா இந்த இல்லத்தில் தங்கியமை தொடர்பி;ல் அரசியல் மட்டத்தில் ஆச்சரியம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தகவல்படி சரத் என் சி;ல்வா, விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஊக்க மருந்து தொடர்பான நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வாவுடன் இணைந்தே குறித்த இல்லத்தில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.