மோசுல் நகரிலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறினர்?

ஈராக்கின் மோசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஐந்து இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன. 

மோசுல் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரம். 

அந்த நகரை கைப்பற்றியுள்ள, இராக்கிய இஸ்லாமியத் தேசம் மற்றும் இசிஸ் என்று அழைக்கப்படும் லெவெண்ட் அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன. 

இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. 

அல் கயீதாவின் ஒரு கிளை அமைப்பான இசிஸ், இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய ஈராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

இதுதவிர ஈராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர். 

இதனிடையே நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சுன்னி முஸ்லிம்களுடன் இணைந்து செயல்பட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்யுமாறு, ஷியா முஸ்லிமான பிரதமர் நூரி அல் மலிக்கியிடம் அமெரிக்கா கோரியுள்ளது. 

ஈராக்கின் பாரபட்சமான கொள்கைளை முன்னெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நூரி அல் மலிக்கி ஆளாகியுள்ளார். இதன் காரணமாக அங்கு இன வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.