மைத்திரிபாலவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைப்பு

மைத்திரிபாலவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 
 
இன்று (22) காலை முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 
 
எதுஎவ்வாறு இருப்பினும் முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பாரளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.