மணிரத்தினம் மனதை வென்ற நடிகை

மணிரத்தினம் மனதை வென்ற நடிகை
‘குரு’, ‘ராவணன்’, ‘கடல்’ படங்களுக்கு பிறகு டைரக்டர் மணிரத்னம் புதிய படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 
 
இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அவரது இசையில் மகன் ஆமீர் ஒரு பாடல் பாடுகிறார். கதாநாயகன், கதாநாயகி தேர்வு நடந்து வந்தது.
 
இப்படத்திற்காக மணிரத்னம் ஏராளமான புதுமுகங்கள், தற்போதைய நடிகர்–நடிகைகளையும் தேர்வு செய்து வந்தார். இதில் திருப்தி இல்லை. இப்போது மலையாள பட வெற்றி ஜோடியான நடிகர் சல்மான்–நடிகை நித்யா மேனன் ஆகியோர் மணிரத்னம் படத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த ஜோடி மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘பெங்களூர் டேஸ்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. மணிரத்னம் இந்த ஜோடியையே தனது படத்துக்கு தேர்வு செய்துள்ளார். 
 
படத்தின் கதை சென்னையிலும், மும்பையிலும் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தனது பழைய படம் ஒன்றையே ரீமேக் செய்யபோவதாகவும் கூறப்படுகிறது. திங்கட்கிழமை படப்பிடிப்பு துவங்குகிறது.