புலித்தடை நீக்கம்: எதிர்த்து வெள்ளவத்தையில் கையொப்பம்

புலித்தடை நீக்கம்: எதிர்த்து வெள்ளவத்தையில் கையொப்பம்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் கையொப்பம் பெறும் நடவடிக்கையை தனியார் போக்குவரத்து அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
 
எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை வெள்ளவத்தையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.