பிரெஞ்சு வான்படை உதவியுடன் ஹொன்னா நகரை மாலியின் படையினர் மீளக் கைப்பற்றினர்

 

இஸ்லாமிய போராளிகளிடம் இருந்து முக்கிய நகரை மாலியின் இராணுவத்தினர் மீளக்கைப்பற்றியுள்ளனர்.

பிரெஞ்சு வான்படை உதவியுடன் இந்த நகரத்தை மாலியின் படையினர் கைப்பற்றினர்.

இந்தநிலையில் குறித்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் அறிவிப்பில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலியின் முன்னணி நகரான ஹொன்னாவேயே (Konna)  மாலிப்படையினர் மீளக்கைப்பற்றியுள்ளனர்.

மாலிப்படையினர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு - நைகர் மற்றும் செனகல் ஆகிய நாடுகள் 1000க்கும் மேற்பட்ட படையினரை வழங்கி உதவி புரிந்துள்ளது.