அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்திலிருந்து நேற்றைய தினம் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியமையைத் தொடர்ந்து.
மேலும் சிலர் எதிர்க் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்குள் இருக்கும் அதிருப்தியை சமாளிக்கும் வகையிலே நிமல் சிறிபால டி சில்வாவிற்கு தற்காலிகமாக பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் நாளைய தினம் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையுடன் தேர்தல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.