பாலிவுட்டில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தான் எடுக்கும் புதிய படத்தில் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளது.
கொலிவுட்டை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பே நிலவுகிறது.
கடைசியாக வெளிவந்த எந்திரன் திரைப்படம் இந்தியா அளவில் அதிக தொகையை வசூலித்து சாதனை படைத்தது.
எனவே ரஜினி நடித்துக்கொடுத்தால் செலவிற்கு மிஞ்சிய வரவைக் காணலாம் என சாக்ஸ் பிக்சர்ஸின் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா யோசித்திருக்கிறார்.
இதன்படி ரஜினியிடம் சென்று 30 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். ரஜினி சம்மதம் தெரிவிக்கா விட்டாலும் யோசித்து சொல்கிறேன் என்றாராம்.
இப்படத்தில் ரஜினிக்கு சம்பளம் மட்டுமே ரூ.240 கோடி என்கிறது ஒரு தகவல்.
மேலும் இப்படத்தில் தெலுங்கு நாயகன் ராம் சரண் தேஜாவும் நடிக்க இருக்கிறார். ரஜினி சம்மதம் தெரிவித்த பின்பே ராம் சரணை அணுக உள்ளதாக சாக்ஸ் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது