பாகிஸ்தானில் இரட்டைக் குண்டுவெடிப்பு; 93 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரட்டைக்  குண்டு வெடிப்புக்களில் சுமார் 93 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 169 பேர் காயமடைந்துள்ளனர். 

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தென் - மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரிலுள்ள மண்டபமொன்றிலேயே  நேற்று வியாழக்கிழமை இரட்டைக் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், ஊடகவியலாளர்கள் பலர் இரண்டாவது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.