பரிதி படுகொலை சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது

கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிறிலங்காவைச்  சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரென்சு  குற்றத்தடுப்பு நீதித்துறையினரை மேற்கொள்காட்டி பிரென்சு ஊடகங்களில் செய்து வெளிவந்துள்ளது. 
 
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் முதலாம் நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்  இரண்டாம் நபர் இரவு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 33 வயதானவர் எனவும்,குறித்த சந்தேக நபர்களை மையமாக கொண்டு படுகொலையின் பின்னணி குறித்த விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.