நயன்தாராவை அழ வைத்தாரா ஆர்யா?

நயன்தாராவை அழ வைத்தாரா ஆர்யா?
தன் தம்பி சத்யா நடிக்கும் அமரகாவியம் படத்தை ஆர்யா தயாரிப்பது நமக்கு தெரியும். இந்த படத்தை தனது நெருங்கிய தோழியான நயன்தாராவுக்கு ஆர்யா சமீபத்தில் திரையிட்டுக் காட்டியுள்ளார்.
 
காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நயன்தாரா, படம் எப்படி இருக்கிறது என்று சொல்லாமல் திடீர் என்று கண்கலங்கி அழத் தொடங்கி விட்டாராம்.
 
இதுபற்றி இயக்குனர் ஜீவா சங்கர் கூறுகையில், படம் பார்த்த நயன்தாரா நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். வீட்டுக்கு சென்றபிறகும் அவர் அழுது கொண்டிருந்தாராம். படத்தை பார்த்து முடித்த ஒரு வாரத்துக்கு பிறகுதான் என்னை தொடர்பு கொண்டு படம் பற்றி தனது கருத்தை தெரிவித்தார்.
 
நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா இருவரை காதலித்தார் குறிப்பிடத்தக்கது.