த்ரிஷாவுக்கு டும் டும் டும்...

நடிகை த்ரிஷாவின் திருமண விவகாரம் கன்னித்தீவு கதையை விட பெரிய விடயமாக இருக்கிறது. ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என பேட்டியளிப்பார். அடுத்த நாளே 'நான் எப்பொழுது அப்படி சொன்னேன்? எனக்கு ப்ரெண்ட்ஸ், பார்ட்டிதான் முக்கியம்' என்பார்.

அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா நான்கு நிருபர்களை மட்டும் அழைத்து 'மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கன்.. இந்த வருஷம் பாப்பாவுக்கு கல்யாணந்தான்' என்று புதிதாக ஆரம்பிப்பார். மீண்டும் அடுத்த நாள் 'இன்னாருடன் எனக்கு நெருக்கமான உறவிருக்கிறது' என்று த்ரிஷா புதுக்கதை ஆரம்பிப்பார்.

ஏதாவது பெரிய திரைப்பட வாய்ப்பு கிடைத்ததும், உடனே த்ரிஷா மீண்டும் மறுப்பு புராணம் பாடுவார். கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது த்ரிஷாவின் கல்யாண சமாச்சாரம்.

அண்மையில், திரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் பரவின. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கப்பட்டதால், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இருவரும் விருந்துகளில் கலந்துகொண்டு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர், அதுவும் கட்டிப்பிடித்தபடி. இதுபற்றி த்ரிஷாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக பழகுவதாகச் சொன்னார். இரு தினங்களுக்கு முன் த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.

அப்போது த்ரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரத்தை விரலில் அணிவித்தார் என்றும் நகைப்பெட்டி ஒன்றையும் த்ரிஷா கையில் கொடுத்தார் என்றும் கூறினர். இதில் இரு வீட்டு பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்போது வழக்கபோலவே மறுத்தார். 'எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுவது வதந்தி. ராணா எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான்' என்று அறிவித்துள்ளார் த்ரிஷா.