திருநெல்வேலிச் சிவன் கோவில் அருகில் ரவுடிகள் அட்டகாசம், ஒருவர் வெட்டிக் கொலை.

திருநெல்வேலிச் சிவன் கோவில் அருகில் ரவுடிகள் அட்டகாசம், ஒருவர் வெட்டிக் கொலை.
இன்று மாலை திருநெல்வேலி சிவன் அம்மன் கோவில் தேர்முட்டிக்கு அருகில் இளைஞன் ஒருவன் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். இன்னும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபா வயது 27 என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவனாவான். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாரே இவ்வாறு கொலையில் முடிவடைந்துள்ளது.

வீட்டில் நின்ற குறிப்பிட்ட இளைஞனை அழைத்துச் சென்று ஓட ஓட வெட்டியுள்ளனர் ரவுடிகள். குறிப்பிட்ட நபர்களை பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் இருவர் காயமடைந்ததாகத் தெரியவருகின்றது.