தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்!

தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்!

தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். 

2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் 2015 இல் தபால் சேவையை முழுமையாக நவீனப்படுத்த 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.