டோக்கியோவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.