ஜமேக்கா துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி பலி

ஜமேக்கா, சிற்றுண்டிச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த இமானி கிரீன் என்ற பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

ஜமேக்கா, பல்ஹம் நகரம் டன்கேனஸ் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லண்டனின்  தென்பகுதியை சேர்ந்த மேற்படி சிறுமி விடுமுறைக்காக ஜமேக்காவில் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். 

இதன்போது சிற்றுண்டிச்சாலைக்கு வந்த இனந்தெரியாத சிலர் வாக்குவாதமொன்றில் ஈடுபட்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் சிறுமி மீது இரு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் அவரது தலையிலும் சன்னங்கள் பாய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பழிவாங்கும் தாக்குதலாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படடுள்ளது.  இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.