ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நாளை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என்றும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.