சுன்னாகம் பொலிஸாரினால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஆரம்பித்து வைப்பு

சுன்னாகம் பொலிஸாரினால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஆரம்பித்து வைப்பு
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புஜிதஜெயசுந்தர அவா்களின் வழிகாட்டலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச. ஏல். துஸ்மந்த அவா்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஏழாலை சந்தியில் சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
 
நேற்று தொடக்கம் ஒரு மாதக்காலப்பகுதியில் மேற்படி நடமாடும் பொலிஸ் நிலையம் ஊடாக பல்வேறு சமுக நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனார்.
 
நேற்று ஆரம்பித்து வைக்கபட்ட நடமாடும் பொலிஸ் நிலையத்தினை ஓய்வு பெற்ற அதிபரும் பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுத்தலைவருமாகிய திரு தம்பித்துரை அவா்கள் வைபவ ரீதியாக ஆரம்பிதது வைத்தார்.