சீனாவில் மண்சரிவு; 46 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு குறைந்தபட்சம் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக அந்நாட்டு அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சீனாவின் தென் யுனான் மாகாணத்திலேயே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இம்மண்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், யுனான் மாகாணத்திலுள்ள காபோ கிராமத்தைச் சேர்ந்த இரு குடியிருப்பாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படவில்லையெனவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. 

இம்மண்சரிவு காரணமாக இப்பகுதியில் 16 வீடுகள் புதையுண்டுபோயுள்ளன. 

மேலும், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.