சத்தியமே எங்கள் பலம்: சந்திரிகா

சத்தியமே எங்கள் பலம்: சந்திரிகா
இது வரலாற்று நடவடிக்கை...
அரசியல் பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...
மஹிந்தவை நியமித்தமைக்காக என்னை பலர் எதிர்த்தனர்...
மஹிந்தவை நியமித்த 6 மாதத்தில் என்னை துரத்திவிட்டார்...
எனது மௌனமே கட்சியை நிலைகுலையச் செய்தது...
9 வருடங்கள் காத்திருந்தேன்...
அதிகாரத்திலுள்ள தலைவர், பொறுக்கமுடியாதளவு கொடுமைகளைச் செய்தார்...
எனது வரலாற்றுப் பதிவை எழுதி வருகிறேன்...
யுத்த வெற்றியைப் பாராட்டுகிறேன்...
யுத்தத்தை வென்றவரை சிறையில் அடைத்தனர்...
அரச ஊழியர்களின் சம்பளம் உயரவில்லை...
வாழ முடியவில்லை என மக்கள் வருந்துகின்றனர்...
சட்டம் சீர்குலைந்துள்ளது...
மனிதப் படுகொலை, மோசடிகளே ஆட்சியமைக்கின்றன...
பொலிஸ் துறை கேவலப்படுத்தப்பட்டுள்ளது...
இவை பயங்கரமானவை...
17ஆவது திருத்தம் வீசப்பட்டுள்ளது...
ஆட்சியாளர்கள் சிரித்துக்கொண்டே பொய்களைக் கூறி ஆட்சியமைத்து வருகின்றனர்...
எதிர்த்தவர்களுக்கு, எதிர்ப்பவர்களுக்கு வெள்ளை வான்...
என்னை மீண்டும் போட்டியிடுமாறு பெரும்பாலானோர் கோரினர்...
அதிகாரத்திலிருக்கும் பேராசை எனக்கு இல்லை...
பழிவாங்கும் தலைவர்கள் இருக்கின்றனர்...
பாதுகாப்பு தேவைப்படுகிறது...
எங்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை...
எங்களுக்குரிய சகல வரப்பிரசாதங்களுமத் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன...
பிள்ளைகள் எதிர்க்கின்றனர்...
எனினும் நாட்டுக்காக தீர்மானம் எடுத்தேன்...
வெளியில் இறங்கும்போது உயிர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும்...
பயப்படமாட்டேன்...
சத்தியமே எங்கள் பலம்...
நாம் ஜனாதிபதி போராட்டத்தில் இறங்குவோம்...
சகலரும் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் இது...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க எதிர்க்கட்சிகளின் உதவி கிடைக்கவில்லை...
நாட்டைப் பிளவுபடுத்த பிரபாகரன் என்னை கொல்ல முயன்றார்...