சடலத்துடன் அவுஸ்திரேலியா சென்றடைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்..!

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் அடங்கிய படகிலிருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இந்த அகதிப் படகில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அகதிகள் படகில் 62 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகள் அனைவரும் தற்போது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சடலம் குறித்த விசாரணைகளை கிறிஸ்மஸ் தீவின் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.