கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்
கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதையும், மரக்கன்றுகளை நடுகை செய்வதையும் படங்களில் காணலாம்.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் வாரத்தில் எந்த ஒரு விழாவையும் நடத்தக்கூடாது என்று படையினர் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டபோதும், இக்காலப்பகுதியில் வடக்கின் பல்வேறு இடங்களிலும் நிறுவனங்களும் பொதுமக்களும் மரநடுகையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.