கிரிக்கெட் அணி வீரர்கள் யாழில்...

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, ஏஞ்சலோ மத்தியூஸ், நுவன் குலசேகர, தினேஸ் ஷந்திமால் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

வடமாகாணத்தில் நடைபெறுகின்ற முரளி நல்லிணக்க வெற்றிக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இவர்கள் விஜயம் செய்துள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இப்போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெறும் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக இவர்கள் கலந்துகொண்டனர்.

போட்டியாளர்களுக்கு கிரிக்கெட் போட்டியின் நுட்பங்கள் பற்றிய விளக்கங்களும் இவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது