கத்தி விவகாரத்தில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மோதல் வெடித்தது!

கத்தி விவகாரத்தில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மோதல் வெடித்தது!
கத்தி படத்தை வரும் தீபாவளி அன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
 
இப்படத்தை ஆரம்பித்த போது தயாரிப்பு பணி ஐங்கரன் கையில் தான் இருந்ததாம், ஆனால் அவர்களின் பணக்கஷ்டத்தால் படம் லைகாவிற்கு கைமாறியுள்ளது. இந்த விஷயம் சிறிதளவும் விஜய்க்கு தெரியவில்லை, இதை மறைக்க முருகதாஸ்க்கு கூடுதலாகவும் லைகா பணம் கொடுத்துள்ளது.
 
தற்போது தலைக்கு மேல் கத்தி வந்ததும் தான், விஜய்யிடம் நடந்ததை எல்லாம் கூற, கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டாராம் இளைய தளபதி. இதன் காரணமாக சமீபத்தில் படப்பிடிப்பில் கூட இருவரும் முகம் கொடுத்து பேசவில்லையாம்.